நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக் கூடாது என்பதற்காகக் கடந்த 2022ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 24ம் தேதி ரஷ்யா, அந்த நாட்டின் மீது தாக்குதலைத் துவங்கியது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைனும் ரஷ்யா மீது தாக்குதலை நடத்திவருகிறது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை உக்ரைனின் இந்தத் தாக்குதல்களுக்கு ஆயுதம் மற்றும் நிதியுதவி அளித்துவருகின்றன. இதனைக் கொண்டு உக்ரைன் தொடர்ந்து ரஷ்யா மீது தாக்குதல் நடத்திவருகிறது.
உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கியது. அதேசமயம், அந்த ஆயுதங்களை ரஷ்யத் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தது. அதேபோல், உக்ரைனும் பயன்படுத்திவந்தது. ஒரு கட்டத்திற்கு மேல், ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதி வேண்டும் என உக்ரைன் அமெரிக்காவிடம் வலியுறுத்திவந்தது.












