Email :16
பீகாரின் ராஜ்கிரில் நேற்று நடந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான பெண்கள் ஹாக்கிப் போட்டியில், ஜப்பானை 3-0 கோல் கணக்கில் வென்ற இந்திய அணி, அதிரடியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லீக் போட்டிகளில் 15 புள்ளிகள் பெற்று இந்திய அணி முதலிடம் பெற்றது. சீன அணி, 12 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது.
இதையடுத்து நாளை நடக்கும் அரை இறுதிப் போட்டியில், பட்டியலில் 4ம் இடத்தில் உள்ள ஜப்பான் அணியுடன், இந்திய வீராங்கனைகள் மோதுகின்றனர். மற்றொரு அரை இறுதியில் பட்டியலில் 3ம் இடத்தில் உள்ள மலேசியா அணியுடன், சீன அணி மோதுகிறது.












