Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

Breaking News :
  • Home
  • வர்த்தகம்
  • தொடர்ந்து 6-வது நாளாக உயரும் தங்கம் விலை; நகை வாங்குவோர் அதிர்ச்சி…
வர்த்தகம்

தொடர்ந்து 6-வது நாளாக உயரும் தங்கம் விலை; நகை வாங்குவோர் அதிர்ச்சி…

Email :34

தங்கம் விலை தொடர்ந்து 6வது நாளாக உயர்ந்ததால் நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச அளவில் இந்தியாவில்தான் கலாசார ரீதியாகவும், முதலீட்டிற்கும் அதிக அளவு மக்கள் தங்கத்தை விரும்பி வாங்குகிறார்கள். இந்த நிலையில் கடந்த அக்டோபர் 31-ம் தேதி தங்கத்தின் விலையானது இந்தியாவில் புதிய உச்சபட்சத்தை தொட்டது.

அந்த வகையில் ஒரு பவுன் 60 ஆயிரத்தை எட்டியது. ஆனால் அடுத்த சில நாட்களிலையே சரிய தொடங்கியது. குறிப்பாக 15 நாட்களில் ரூ.4200 என்ற அளவிற்கு குறைந்தது. எனவே இந்த விலை குறைவானது சில நாட்கள்தான் நீடிக்கும், மீண்டும் விலை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் தங்கத்தின் விலையானது மீண்டும் கடந்த 6 நாட்களாக தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.

அதன்படி, நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயர்ந்தது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,225-க்கும் பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு பவுன் ரூ. 57,800-க்கும் விற்பனையான நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.58,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.7,300க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.101-க்கு விற்கப்படுகிறது

இதனால் கடந்த 6 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2920 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா-உக்ரைன் இடையே மீண்டும் போர்ப்பதற்றம் ஏற்பட்டதன் விளைவாக தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் சென்றுள்ளது. இதன் காரணமாக தங்கம் விலை உயரத் தொடங்கி உள்ளது என்று நகை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts