டெல்லி பிரசாந்த் விஹார் பகுதியில் நண்பகலில் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் பிரதான பகுதிகளில் ஒன்று பிரசாந்த் விஹார். வடக்கு டெல்லியில் இருக்கும் பிரசாந்த் விஹாரில் உள்ள பி.வி.ஆர். தியேட்டர் அருகே சற்று நேரத்திற்கு முன்பு பலத்த வெடிச் சத்தம் கேட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த இடத்தில் குண்டுவெடிப்பு நடந்தாக தகவல் வந்த நிலையில், அது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும், பலத்த வெடிச் சத்தம் கேட்க என்ன காரணம் என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்கள்.
இது குறித்து டெல்லி தீயணைப்பு அதிகாரிகள் கூறுகையில்; 11.48 மணி அளவில் பிரசாந்த் விஹாரில் மர்மப் பொருள் வெடித்தாக தகவல் கிடைத்தது. இப்போது சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர் என்றார். அங்கு வெள்ளை நிற பவுடர் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அது என்ன என்பதைக் கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். நல்வாய்ப்பாக இந்த மர்மப் பொருள் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழப்புகள் அல்லது காயம் எதுவும் ஏற்படவில்லை.












