சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இருந்தாலும் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் காரணமாக, இதுவரை இறுதி முடிவு எடுக்க முடியாமல் ஆலோசனை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரைபாகிஸ்தானில் நடைபெற உள்ளது. ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்திய அணி பாகிஸ்தான் சென்று ஆட மறுத்துவிட்டது. இதனால் பிசிசிஐ சார்பாக ஆசியக் கோப்பையை போல் ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் யோசனை முன் வைக்கப்பட்டது.












