Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

Breaking News :
  • Home
  • இந்தியா
  • பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை….
இந்தியா

பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை….

Email :32

குல்காமில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த மோதலில் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் தொடர்ந்து கொண்டே வருகிறது. பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மீண்டும் துப்பாக்கிசூடு நடைபெற்றது.

இந்த துப்பாக்கிசூட்டில் பாதுகாப்பு படையினர் பெரும் வெற்றி பெற்றுள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 5 தீவிரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இரண்டு ராணுவ வீரர்களும் காயமடைந்துள்ளனர்.

இதே போல் இரண்டு மாதங்களுக்கு முன்பு, அக்டோபர் 28 அன்று, ஜம்முவின் அக்னூர் பகுதியில் பாதுகாப்புப் படையினரால் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அப்போது, ​​ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts