திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 8 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசிக்கின்றனர். இந்நிலையில் புத்தாண்டையொட்டி நேற்று ஒரேநாளில் 69,630 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 18,965 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்றிரவு எண்ணப்பட்டது. அதில், ₹3.13 கோடி காணிக்கை கிடைத்தது. இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள சுமார் 20 அறைகளில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுமார் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணிநேரத்தில் தரிசனம் செய்தனர்.












