ஐதராபாத் – கம்மம் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். ஒடிசாவில் இருந்து கூலி வேலைக்காக தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த 17 தொழிலாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சூர்யாபேட்டை மாவட்டம் சூர்யாபேட்டை-கம்மம் நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது தனியார் டிராவல்ஸ் பேருந்து மோதியதில் சாலை விபத்து ஏற்பட்டது. இதில் 2 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குப்தா டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து ஒடிசாவில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது.
நேற்று 32 தொழிலாளர்களுடன் கலஹண்டி சினாபாலியில் இருந்து ஹைதராபாத் நோக்கி பேருந்து புறப்பட்டது. அதிகாலை 3.00 மணியளவில் சூர்யாபேட்டை-காமம் சாலையை பேருந்து கடந்து கொண்டிருந்தது. ஒடிசாவின் நுவாபாடா மாவட்டத்தின் சினாபாலி பிளாக்கில் இருந்து ஹைதராபாத் நோக்கி தனியார் பேருந்தில் சுமார் 32 பயணிகள் பயணம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் அறிந்ததும் சிவ்வெள்ளா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சூர்யாபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.












