ஊரக உள்ளாட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிப்பது தொடர்பான மசோதாவை அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்களை நியமிப்பது குறித்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 28 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்களை அரசு நியமித்துள்ளது. தனி அதிகாரிகளை நியமனம் செய்வதற்கு பேரவையில் மசோதா தாக்கல் செய்ய வேண்டும். மாவட்ட ஊராட்சிகளை ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் இயக்குநர்கள் நிர்வகிக்க உள்ளனர். ஊராட்சி ஒன்றியங்களை ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்களும் நிர்வகிக்க உள்ளனர்.












