Email :12
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ரஹிம் யார் கான் மாவட்டத்தில் உள்ள போங் பகுதியில் இருந்து சுமார் 3 இந்துக்களை ஆயுதம் ஏந்திய 5 பேர் துப்பாக்கி முனையில் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் கடத்திச் சென்றனர். கொள்ளை கும்பல் தலைவன் ஆஷிக் கோராய் அகமெத்பூர் லாமா காவல்துறை அதிகாரிக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளான். இந்த வீடியோவில் தங்களது கோராய் குடும்பத்தை சேர்ந்த 10 பேரையும் விடுவிக்க வேண்டும். இல்லையென்றால் கடத்தப்பட்ட மூன்று பேரையும் கொன்று விடுவோம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.












