Email :12
டெல்லியில் மொத்தமுள்ள 70 பேரவை தொகுதிகளுக்கு அடுத்த மாதம்(பிப்ரவரி) 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் தனித்தனியே போட்டியிடுகின்றன. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நாளை மாலை 5.30 மணிக்கு வடகிழக்கு டெல்லியின் சீலம்பூர் பகுதியில் நடக்கும் ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதான் என்ற தலைப்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.












