சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்றுமுன்தினம் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு,அனைத்து பூக்களின் விலை 4 மடங்கு உயர்ந்தது. நாளை பொங்கல் பண்டிகை முன்னிட்டு, இன்று காலை அனைத்து பூக்களின் விலை 7 மடங்கு உயர்ந்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ மல்லி 2,600 ரூபாயில் இருந்து 3 ஆயிரத்துக்கும் ஐஸ் மல்லி 2 ஆயிரத்தில் இருந்து 2,500க்கும் முல்லை 1,400 லிருந்து 2,100க்கும் ஜாதிமல்லி 1000 லிருந்து 1,800 க்கும் கனகாம்பரம் 1,400 லிருந்து 1,500க்கும் அரளி பூ 200 லிருந்து 500 க்கும் சாமந்தி 160 லிருந்து 180 க்கும் சம்பங்கி 180 லிருந்து 250க்கும் பன்னீர் ரோஸ் 160 லிருந்து 180 க்கும் சாக்லேட் ரோஸ் 150 லிருந்து 280 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறும்போது, ‘’வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு 4 மடங்கு பூக்களின் விலை உயர்ந்தது. நாளை பொங்கல் பண்டிகை முன்னிட்டு அனைத்து பூக்களின் விலை உயர்ந்துள்ளது. பூக்கள் வாங்குவதற்கு இன்று அதிகாலையில் மக்கள் குவிந்ததால் வியாபாரம் களைகட்டியது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்’ என்றார்.












