Email :16
மாநில மகளிர் ஆணைய தலைவர், உறுப்பினர் நியமனம் தொடர்பாக ஜனவரி .15க்குள் உத்தரவு பிறப்பிக்கப்படும் என புதுச்சேரி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜமுனா என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு உறுதி அளித்தது. புதுச்சேரி மாநில மகளிர் ஆணைய தலைவர், உறுப்பினர் பதவிகளை நிரப்ப அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் புதுச்சேரி அரசின் உத்தரவாதத்தை ஏற்று, வழக்கின் விசாரணையை ஜனவரி .23க்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.












