Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

Breaking News :
  • Home
  • தமிழகம்
  • பொங்கல் தொகுப்புடன் ரூ.2000 வழங்க கோரிய முறையீட்டில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது…..
தமிழகம்

பொங்கல் தொகுப்புடன் ரூ.2000 வழங்க கோரிய முறையீட்டில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது…..

Email :21

பொங்கல் தொகுப்புடன் ரூ.2000 வழங்க கோரிய முறையீட்டில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 2025ம் ஆண்டு நிதி பற்றாக்குறை காரணமாக நிதி உதவி வழங்க முடியாது என அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2000 வழங்கக் கோரி பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் மோகன்தாஸ் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதி வழங்குவது பேருதவியாக இருக்கும். அதனால், இந்த பொங்கல் பண்டிகைக்கு இலவச தொகுப்புடன் சேர்ந்து 2,000 ரூபாய் நிதி உதவி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

வழக்கை விசாரணைக்கு எடுக்க நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமிநாராயணன் அமர்வில் வழக்கறிஞர் முறையீடு செய்த்திருந்தார். இந்த வழக்கு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்பொங்கல் தொகுப்புடன் பணம் வழங்குவதா, இல்லையா என்பது அரசின் கொள்கை முடிவு என்றும் பொங்கல் தொகுப்புடன் ரூ.2000 வழங்க கோரிய முறையீட்டில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts