ஊட்டி: வனபரப்பு மிகுந்த நீலகிரி மாவட்டத்தில் புலி, சிறுத்தை, கரடி, காட்டு மாடு, யானை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. ஊட்டி நகரம் உட்பட மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகள் வனத்தை ஒட்டியே அமைந்துள்ளன. இதனால் வனத்தில் இருந்து வெளியேற கூடிய காட்டு மாடு, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் நகருக்குள் உலா வருவது வழக்கம். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஊட்டி எச்பிஎப் பகுதியில் புலி நடமாட்டம் இருந்தது. இந்நிலையில் ஊட்டி அருகே சோலூர் பகுதியில் தேயிலை தோட்டத்தில் புலி ஒன்று அமர்ந்திருந்ததை அவ்வழியாக சென்ற சிலர் செல்போனில் பதிவு செய்துள்ளனர்.












