Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

Breaking News :
  • Home
  • தமிழகம்
  • தடையை மீறி மெரினாவில் போராட முயன்ற 51 பாஜகவினர் மீது வழக்கு பதிவு….
தமிழகம்

தடையை மீறி மெரினாவில் போராட முயன்ற 51 பாஜகவினர் மீது வழக்கு பதிவு….

Email :16

மெரினாவில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற பாஜகவினர் 51 பேர் மீது அண்ணாசதுக்கம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்காரத்தை கண்டித்து பாஜக மாநில இளைஞர் அணி சார்பில் மெரினா உழைப்பாளர் சிலை அருகே நேற்று போலீசாரின் தடையை மீறி கையில் பதாகைகளுடன் போராட்டம் நடத்த ஒன்று கூடினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் முன் அறிவிப்பு மற்றும் எந்த அனுமதியும் பெறாமல் தடை செய்யப்பட்ட இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று கூறினர்.

ஆனால் பாஜக இளைஞர் அணி மாநில தலைவர் ரமேஷ் சிவா தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் வாயில் கருப்பு துணியை கட்டி கொண்டு பேரணியாக சென்று போராட்ட முயன்றனர். உடனே போலீசார் அனைவரையும் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்து அருகில் உள்ள சமுதாய நல கூடத்தில் அடைத்து வைத்து மாலை விடுவித்தனர். அதனை தொடர்ந்து அண்ணாசதுக்கம் போலீசார் தடை செய்யப்பட்ட பகுதியில் அத்துமீறி போராட்டம் நடத்த முயன்ற பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் உட்பட 51 பேர் மீது 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts