Email :13
விரைவில் நிரந்தர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். TRB மூலம் 6,000 ஆசிரியர்களை நியமிக்க தேர்வுகள் நடந்துள்ளன. கடந்தாண்டு நவம்பரில் 3,198 பேருக்கு பணி நியமன ஆணை வழங்க இருந்த நிலையில், நீதிமன்ற வழக்கினால் அப்பணி தாமதம் ஆகியுள்ளது. வரும் 21ம் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. நல்ல தீர்ப்பு கிடைத்து நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார்.












