Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

Breaking News :
  • Home
  • அரசியல்
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டி….
அரசியல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டி….

Email :13

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடவில்லை. இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்து உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் 19ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த 7ம் தேதி அறிவித்தது. இதைத்தொடர்ந்து, வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.

இந்நிலையில், கடந்த 2 முறை இந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்து உள்ளார். இதுகுறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் வரவிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவு அடைந்ததையொட்டி இடைத்தேர்தல் வரவிருக்கிறது. 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், முதல்வர் மற்றும் இந்தியா கூட்டணியின் தமிழ்நாட்டின் தலைவராக விளங்கி கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையின் தீவிர ஆலோசனைக்கு பிறகு நாங்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டு இந்திய கூட்டணியின் சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் போட்டியிடுவார் என்று இன்று (நேற்று) உறுதிசெய்யப்பட்டது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க நாட்டில் ஜனநாயகம் மலரச்செய்ய நாம் அனைவரும் ஒன்றினைந்து இந்திய கூட்டணியின் திமுக வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts