Email :13
மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு வழங்கிய ஏல உத்தரவை முழுமையாக ரத்து செய்யும் வரை ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட அரசின் எந்த சலுகையும் வேண்டாம் என அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர். அரிட்டாபட்டியில் உள்ள 820, நரசிங்கம்பட்டியில் உள்ள 444 கார்டுகள் என மொத்தம் 1200க்கும் மேற்பட்ட குடும்ப அட்டை கொண்ட பொருட்களை மக்கள் வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.












