Email :10
உபி முன்னாள் முதல்வரும் பிஎஸ்பி தலைவருமான மாயாவதி நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு பிஎஸ்பி ஆதரவளிக்கிறது. இது செலவுகளைக் குறைக்கும், மக்கள் நலப் பணிகள் தடையின்றி தொடரும் என்பதால் மற்ற கட்சிகளும் இந்த நடவடிக்கையை ஆதரிக்க வேண்டும்.தலித், பழங்குடியினர்,பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அரசியலமைப்பின் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும். ஒன்பதாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒன்றிய,மாநில சட்டங்களுக்கு நீதித்துறை மறுஆய்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.












