பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்காக ஜன.6 முதல் 17 வரை வரட்டுப்பள்ளம் அணையை திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 2024-2025ம் ஆண்டு, ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், வரட்டுப்பள்ளம் அணை பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்காக ஜன.6 முதல் 17 முடிய வரட்டுப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து பழைய ஆயக்கட்டு பகுதி ஏரிகளான அந்தியூர் ஏரி, பிரம்மதேசம் ஏரி, வேம்பத்தி ஏரி மற்றும் ஆப்பக்கூடல் ஏரி ஆகிய ஏரிகளுக்கு மொத்தம் 23.586 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் மற்றும் பவானி வட்டங்களிலுள்ள 809 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.












