Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

Breaking News :
ஆன்மிகம்

மங்கலம் பொங்கும் பொங்கல்….

Email :17

தமிழர் பண்டிகையாம் பொங்கல் பண்டிகையை நான்கு நாட்கள் கொண்டாடப்படும். மார்கழியின் இறுதிநாள் போகிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இது இந்திரனுக்குரிய நாளாகும். இதில் பழையன கழிதலும் புதியன புகுவதும் கொள்ளப்படும். தை முதல் நாள் பெரும் பொங்கல் என்றழைக்கப்படுகிறது. இது சூரிய வழிபாட்டுக்கு உரிய நாளாகும். தை இரண்டாம் நாள், மாட்டுப் பொங்கல் என்று அழைக்கப்படுகிறது. அன்று மாடுகளுக்குப் பொங்கல் இட்டுப் பூசிக்கின்றனர். மாடுகளுக்கு நோய் நொடிகள் தாக்காதிருக்கவும், அவை விருத்தியாகவும், உறுதியுடன் உழைக்கும் வல்லமை பெறவும் தெய்வங்களிடம் பிரார்த்திக்கப் படுகிறது. மாடுகளை ஊர் வலமாக ஓட்டிச் சென்று வீட்டுக்கு அழைத்து வருகின்றனர்.

நான்காம் நாள் கொண்டாடப்படுவது காணும் பொங்கல் விழாவாகும். இதை “பூ” நோன்பி என்பர். இந்நாளில் மக்கள் கட்டுச்சாதங்களைக் கட்டிக்கொண்டு ஊருக்கு அருகிலுள்ள ஆற்றங்கரை, மலைச்சாரல், முதலிய இடங்களுக்குச் சென்று பொழுதைக் கழிப்பர். ஐந்தாம் நாள் வேட்டைக்குச் செல்வர்.காட்டிலுள்ள தெய்வங்கள் தமக்கு வழிகாட்டி நல்ல வேட்டையைத் தரவேண்டுமென்று பிரார்த்திப்பர்.

இது மலை கிராமங்களில் சிறப்புடன் கொண்டாடப்படும். காலையில், மேளதாளம் முழங்க கிராம தெய்வங்களை வழிபட்டுப்பொங்கலிட்டு வேட்டைக்குச் செல்வர். மாலையில் வேட்டையை முடித்துக் கொண்டு திரும்புவர். மாலையில் பெண்கள் ஒன்றுகூடி வேட்டைக்குச் சென்று வெற்றியுடன் திரும்புவர்களை ஆரத்தியெடுத்து வரவேற்பர். காலப் போக்கில் வேட்டைத் திருவிழா ஆலயத்திருவிழாக்களோடு இணைந்ததையும் காண்கிறோம். ஆலயங்களில், இது காணும் பொங்கலன்றே இப்போது நடத்தப்படுகிறது.

பொங்கலன்று மட்டுமே தரிசனம்

தர்மசாஸ்தா ஸ்ரீ மஞ்சுநாதேஸ்வரர் திருக்கோயில் கர்நாடக மாநிலம் சிக்மகளுர் அருகே அமைந்துள்ளது. இத்திருக்கோயில் மகர சங்கராந்தியான பொங்கல் அன்று மட்டுமே திறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். மற்ற நாட்களில் இக்கோயில் மூடப்பட்டிருக்கும். மலைமேல் அமைந்துள்ள இக்கோயிலில் அருள் புரியும் ஈஸ்வரனைத் தரிசிக்க 140 படிகள் ஏறி மேலே செல்ல வேண்டும்.

மந்தைவெளிப் பொங்கல்

மாட்டுப் பொங்கலன்று, மந்தை வெளிப் பொங்கல் என்பது வைக்கப்படும். மேய்ச்சலுக்குச்செல்லும் மாடுகள் உச்சி வெயிலில் படுத்து ஓய்வெடுக்க உண்டாக்கப்பட்ட இடமே மந்தை வெளி எனப்படும். மந்தவெளியில் ஊர்மக்கள் அனைவரின் சார்பாகவும் பொங்கல் வைத்து வழிபடுவர். மாலையில், எல்லா மாட்டு மந்தைகளையும் இங்கே கூடச்செய்து வழிபாடு செய்வர். இங்கு வைக்கப்படும் பொங்கல் மந்தை வெளிப் பொங்கலாகும். கொங்கு நாட்டில் இப்படி பொங்கல் வைப்பது பல இடங்களில் காணப்படுகிறது.

ஈசனை வணக்கும் சூரியன்

கவிகங்காதேஸ்வரர் திருக்கோயில், கர்நாடக மாநிலம் பெங்களூருவின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. மேற்கு திசையில் உள்ள இக்கோயில் மூலவரான ஸ்ரீகவிகங்காதேஸ்வரரை சூரியபகவான் தன் ஒளிக்கதிர்களால் வருடந்தோறும் மகர சங்கராந்தி அன்று மாலை 5.15மணி முதல் 6.00 மணிக்குள் படரவிட்டு வழிபடும் அற்புதத் திருக்காட்சியை தரிசிக்கலாம். இதனை சூரிய பூஜை என்று போற்றுவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts