Email :13
புயல் பாதித்த மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் இருந்த பொதுமக்கள் மீட்கப்பட்டு 67 நிவாரண முகாம்களில் 4906 பேர் தங்க வைக்கப்பட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு 4,000 லிட்டர் பால், 65,000 கிலோ அரிசி வழங்கப்பட்டுள்ளது.












