Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

Breaking News :
  • Home
  • உலகம்
  • அமெரிக்காவில் நாளை முதல் டிக்டாக் செயலிக்கு தடையா?
உலகம்

அமெரிக்காவில் நாளை முதல் டிக்டாக் செயலிக்கு தடையா?

Email :16

அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, டிக்டாக் செயலி நாளை முதல் தடை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘டிக் டாக்’ எனப்படும், மொபைல் போன் செயலி உலகளவில் பிரபலாமக உள்ளது. இன்ஸ்டா ரீல்ஸ்க்கு முன்னோடியாக டிக் டாக்கையே சொல்லலா. வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்துகின்றனர். சீனாவைச் சேர்ந்த ‘ பைட்டான்ஸ்’ என்ற நிறுவனம் இந்த செயலியை நிர்வகித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் முதல் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் அரசு வழங்கிய சாதனங்களில் டிக்டாக் தடை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் டிக் டாக் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை இந்த வார இறுதியில் அமலுக்கு வருகிறது. டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்தால் மட்டுமே தடை நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்போவதில்லை என்று டிக்டாக் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதையடுத்து, டிக்டாக் தடை உறுதி என அமெரிக்க அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், சட்டத்திற்கு தடைகோரி பைட் டான்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு மே மாதம் வாஷிங்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் டிக்டாக் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. டிக்டாக் நிறுவனம் தொடர்ந்த இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், இது குறித்து கொண்டு வரப்பட்ட சட்டமானது, பேச்சுரிமைக்கான அரசின் கட்டுப்பாடுகள் தொடர்பான அரசியலமைப்பை மீறவில்லை எனக்கூறியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, டிக்டாக் செயலி நாளை முதல் தடை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள்காட்டி ஜோ பைடன் சட்டம் இயற்றியுள்ளார். டிக்டாக் செயலியை தடை செய்வது அல்லது அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் சட்டம் இயற்றவேண்டும். அமெரிக்க நிறுவனத்திடம் விற்பனை செய்யாவிட்டால் பிளே ஸ்டோரில் இருந்து செயலியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நாளை முதல் டிக்டாக் செயலிக்கு தடை?
அமெரிக்காவில் சுமார் 17 கோடி பேர் டிக்டாக் செயலி கணக்கு வைத்துள்ளனர் என பைட் டான்ஸ் நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பைட் டான்ஸ் நிறுவனத்தின் வாதத்தை நிராகரித்து, மேல்முறையீட்டு மனுவை அமெரிக்க உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க வேண்டும், இல்லை என்றால் தடை செய்யப்படும்.

டிக்டாக் விவகாரத்தில் டிரம்ப்பின் நிலைப்பாடு என்ன?
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டது, அதை அனைவரும் மதிக்க வேண்டும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். டிக்டாக் குறித்து விரைந்து முடிவெடுக்கப்படும், நிலைமையை ஆய்வு செய்ய எனக்கு நேரம் தேவை. சீன அதிபரிடம் தொலைபேசியில் உரையாடிய டிரம்ப், டிக்டாக் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts