Email :35
சவுதி அரேபியாவில் அடுத்தாண்டு நடக்கும் ஆசிய கோப்பை ஆண்கள் கூடைப்பந்து போட்டிக்கான தகுதிச் சுற்றில் 16 நாடுகளை தேர்வு செய்வதற்கான போட்டிகள் நடக்கின்றன. இ பிரிவில் உள்ள இந்தியா – கத்தார் இடையிலான போட்டி, சென்னை நேரு உள்ளரங்கில் நேற்று நடந்தது. இப்போட்டியின் இறுதியில், 69-53 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவை கத்தார் வென்றது. தொடர்ந்து 3வது முறையாக தோற்றுள்ள இந்திய அணிக்கு, இது ஹாட்ரிக் தோல்வி. இதன் மூலம், ஆசிய கோப்பையில் ஆடும் வாய்ப்பை கத்தார் தக்க வைத்துள்ளது.












