Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

Breaking News :
  • Home
  • இந்தியா
  • சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்…
இந்தியா

சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்…

Email :55

சபரிமலையில் நேற்று மாலை முதல் பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்துள்ளது. இன்று காலை நடந்த 4 மணி நேரத்திற்குள் 26 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சபரிமலையில் கடந்த சில தினங்களாக பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. முதல் 5 நாட்களில் சராசரியாக 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர். பின்னர் பக்தர்கள் தொடர்ந்து அதிகரித்தது. இதற்கிடையே கடந்த 22ம் தேதி முதல் தினமும் சராசரியாக 85 ஆயிரத்திற்கும் அதிகமாக பக்தர்கள் வருகை தந்தனர். தினசரி 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் சில தினங்களாக அதையும் தாண்டி பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. 18ம் படியில் உடனுக்குடன் பக்தர்கள் ஏற்றப்பட்டு வருவதால் நீண்ட நேரம் காத்திருக்காமல் அனைவருக்கும் தரிசனம் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை முதல் பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்துள்ளது. 80 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கும்போது சரங்குத்தி வரை பக்தர்கள் காத்திருந்தனர். நடை திறந்த 4 மணி நேரத்தில் 26 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் பம்பை, சரங்குத்தி, மரக்கூட்டம் ஆகிய பகுதிகளில் கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts