Email :56
சபரிமலை ஐயப்பனுக்கு சார்த்த வேண்டிய தங்க அங்கி தாங்கிய தேர் ஊர்வலம் இன்று தொடங்கயுள்ளது. திருவிதாங்கூர் மகாராஜா வழங்கிய 451 சவரன் தங்க அங்கி தேர் ஊர்வலம் இன்று நடக்கிறது. தேர் ஊர்வலம் இன்று காலை பத்தனம்திட்டா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்படுகிறது. வழிநெடுகில் பக்தர்களின் தரிசனம், வழிபாட்டுடன் ஊர்வலம் டிச.25இல் பம்பை வந்தடையும். பம்பையில் இருந்து தங்க அங்கி தலைச்சுமையாக சபரிமலை சன்னிதானம் கொண்டு செல்லப்படும். டிச.25 மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு உறுமி இசையோடு மகா தீபாராதனை நடக்கும்.












