Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

Breaking News :
  • Home
  • இந்தியா
  • தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்..
இந்தியா

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்..

Email :34

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்தது. தமிழ்நாட்டில் நவ.25, 26, 27, 28 ஆகிய 4 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 12 முதல் 20 செமீ வரை மழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் நவ 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு அந்தமான் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவியது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த காற்றழுத்த தாழ்வானது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து நவம்பர் 25 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் கவனம் செலுத்தி, அடுத்த 2 நாட்களில் தமிழ்நாடு இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக, தமிழ்நாட்டில் வரும் 25 முதல் 28ம் தேதி வரை 4 நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இதன் காரணமாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts