Email :19
சென்னை: ரயில் உதவி ஓட்டுநர் தேர்வுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தேர்வர்கள் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் எஞ்சின் உதவி ஓட்டுநர் பணிக்கு தமிழ்நாட்டில் 493 காலிப் பணியிடங்கள் இருப்பதாக 2024 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது. ரயில் உதவி ஓட்டுநர் தேர்வுக்கு தமிழ்நாட்டில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். CBT2 என்ற 2-ம் கட்ட கணினி முறைத் தேர்வு 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தெலுங்கானாவில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.












