Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

Breaking News :
  • Home
  • ஆன்மிகம்
  • திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்… தஞ்சை பெரிய கோவிலில் ஐப்பசி பௌர்ணமி கிரிவலம்…‌
ஆன்மிகம்

திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்… தஞ்சை பெரிய கோவிலில் ஐப்பசி பௌர்ணமி கிரிவலம்…‌

Email :33

தஞ்சாவூர் பெரிய கோவிலில் தென் கைலாய பௌர்ணமி கிரிவலம் நடைபெற்றது. இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட பெருவுடையாரின் அருளைப் பெற்றனர்.

தஞ்சை பெரிய கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பௌர்ணமி கிரிவலம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் துவங்கியது. இந்த நிலையில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு பெரிய கோவிலில் தென் கைலாய பௌர்ணமி வலம் மங்கள இசை, மயிலாட்டத்துடன் துவங்கிய‌து. பௌர்ணமி வலத்தில் கலந்து பக்தர்களின் வசதிக்காக அதிக குடிநீர் வசதி, பிரசாதம், காலணி வைக்க தனியிடம், ஆம்புலன்ஸ், தீயணைப்பு என எக்கச்சக்கமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.‌முக்கியமாக தஞ்சை பெருவுடையார் கோவிலில் அன்னாபிஷேகமும் பௌர்ணமி வலமும் ஒரே நாளில் வந்ததால் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருவுடையாரின் அருளைப் பெற்றனர்.

பௌர்ணமி வலம் ஐதீகம்:

கிரிவலம் செல்லும்போது நமசிவாய,சிவாயநம அல்லது திருமுறைகளையோ தேவாரம், திருவாசங்களை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு சொல்லிக்கொண்டே கிரிவலம் செல்லும் போது சிவ பெருமானின் அருள் நேரடியாக கிடைப்பதோடு நம் வேண்டுதல்களை சிவ பெருமான் நிறைவேற்றுவார் என்பது ஐதீகம்‌‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts