வேத சாஸ்திரத்தில் ஜோதிடங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தில் கனப்படும் கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய ராசியையும் நட்சத்திரத்தையும் மாற்றுகின்றன.
பன்னிரண்டு கிரகங்களுள் நிழல் கிரகமாக கருதப்படும் ராகு-கேது, பதினெட்டு மாதங்களுக்கு ஒருமுறை தங்களுடைய ராசியை மாற்றுகின்றன.
அந்த வகையில் ராகு மீனம் ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் வரும் மே மாதம் 18-ம் தேதி பெயர்ச்சி அடைகின்றனர்.
இதனால் மீனம் ராசியினருடைய வாழ்வில் பல ஏற்ற தாழ்வுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. ராகு – கேது பெயர்ச்சியால் மீன ராசியினர் எத்தகைய சுப அசுப பலன்களை பெறப்போகிறார்கள் என்பதை தற்போது தெரிந்துகொள்ளலாம்.
பொறுமை: மீன ராசியினர் ஜீன் மாதம் வரை பொறுமை காப்பது நல்லது. இறை வழிபாட்டின் மூலம் பிறருக்கு உதவி செய்வதன் மூலம் வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து வெளிவர இயலும். போதைப்பொருள், பெண் ஆகியவற்றால் பிரச்சினைகள் எழும் வாய்ப்புள்ளது. ஆண்கள் பெண்களிடமும் பெண்கள் ஆண்களிடமும் பழகும் போது கவனம் தேவை. பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவடையும் வாய்ப்புள்ளது. இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது.
நேர்மறை சிந்தனை: இந்த காலகட்டத்தில் அதிக அளவிலான எதிர்மறை சிந்தனைகள் உருவாகும் வாய்ப்புள்ளது. அத்தகைய சூழலில் நேர்மறையாக சிந்திக்க வேண்டும். வாழ்வின் நல்ல தருணங்களை நினைத்து பார்ப்பது நல்லது.
பேச்சில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் மிக கவனமாக இருப்பது நல்லது. உடல் நலத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதன் மூலம் நன்மை பெறலாம்.
முன்னேற்றம்: தொழில், வியாபாரம், வேலை, கல்வி ஆகியவற்றிற்காக வெளியூர் அல்லது வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு உருவாகலாம். பணிபுரியும் இடத்தில் பணிமாற்றம் ஏற்படலாம். வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்பசும் வாய்ப்பு அதிகம் உள்ளது. வாழ்வாதார தேவைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள்.
வேலை: பாதுகாப்பு துறை சார்ந்த வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதில் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள இருப்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். கும்பகோணம் அருகே உள்ள திரும்பாபூரில் உள்ள சிவபெருமானை வழிபடுவதன் மூலம் ராகு கேதுவால் உண்டாகும் துன்பங்கள் விலகி நன்மைகளை பெற வழிவகுக்கும்.
பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. நியூஸ்18 தமிழ்நாடு இது தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. எந்தவொரு தகவலையும் செயல்படுத்துவதற்கு முன்புசம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.












