‘தி சபர்மதி ரிப்போர்ட்’ என்ற படத்தை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
சபர்மதி விரைவு ரயில் கடந்த 2002 ஆம் ஆண்டு எரிக்கப்பட்டது. இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ என்ற பெயரில் கடந்த வெள்ளிக்கிழமை படம் வெளியாகியுள்ளது.
இதில் விக்ராந்த் மாஸி நாயகனாக நடித்துள்ளார். ராஷி கண்ணா, ரித்தி டோக்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, படத்தை தீரஜ் சர்மா என்பவர் இயக்கியுள்ளார்.
இதற்கிடையே, இந்த படத்தில் இடம்பெற்ற காட்சிகளை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மோடி, உண்மை வெளியே வந்துவிட்டது என்று தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பொய்யாக பரப்பப்படும் தகவல்கள் சில காலம் மட்டும் நீடிக்கும் என்று கூறியுள்ள பிரதமர் மோடி, உண்மையான தகவல்கள் எப்போதும் வெளியே வந்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்











