சூரிய மின்சக்தி திட்டங்களை பெற இந்திய அதிகாரிகளுக்க ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்த புகாரில், அதானி குழு தலைவருக்கும், அவரது மருமகன் சாகருக்கும் அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் சம்மன் அனுப்பி உள்ளது. இந்தியாவில் சூரிய சக்தி மின்சார ஒப்பந்தங்களை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் தருவதற்காக, அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து கடனாகவும், பத்திரங்கள் மூலமாகவும் ரூ.2,100 கோடியை அதானி குழுமம் பெற்றதாக நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்திற்கான அரசு வழக்கறிஞர் அலுவலகம் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் அதானி மட்டுமின்றி அவரது மருமகன் சாகர் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை அதானி குழுமம் மறுத்துள்ளது.












