சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 66 ஆயிரத்தை கடந்தது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது.
இதற்கிடையே பங்குச்சந்தை வீழ்ச்சியை தொடர்ந்து, தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் தங்கத்தை வாங்க முடியாத சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். அந்த வகையில் நேற்று ஒரு கிராம் ரூ.8250-க்கும், சவரன் ரூ.66,000-க்கும் விற்பனை செய்யப்ட்டது. இந்நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.320 உயர்ந்து ரூ.66,320க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.8,290க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒருகிராம் ரூ.114க்கும், ஒருகிலோ ரூ.1,14,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.












