Email :17
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொன்ற வழக்கில் வரும் 27-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும். கல்லூரி மாணவி சத்யபிரியா தன்னுடன் பேசுவதை நிறுத்தியதால் சதீஷ் ஆத்திரத்தில் ரயில் முன் தள்ளி கொலை செய்தார். வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் குற்றபத்திரிகை தாக்கல் செய்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு வரும் 27-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி ஸ்ரீதேவி கூறியுள்ளார்.












