Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

Breaking News :
  • Home
  • அரசியல்
  • இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்கள், படகுகளை விடுவிக்க தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும்…
அரசியல்

இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்கள், படகுகளை விடுவிக்க தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும்…

Email :16

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 இந்திய மீனவர்களையும் அவர்களது மீன்பிடி விசைப்படகையும் கடந்த 8ம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்ததை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். கைது செய்யப்பட்ட 10 மீனவர்களில், 6 மீனவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் (5 பேர் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர்). மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு மீன்பிடி தொழிலை மட்டுமே பெரிதும் நம்பியுள்ளளனர். இலங்கை கடற்படையினர் இதுபோன்று மீனவர்களை சிறைபிடிப்பதால், அவர்களது குடும்பத்தினர் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 102 மீனவர்களும், 210 மீன்பிடி படகுகளும் இலங்கை வசம் உள்ளது. எனவே, உரிய தூதரக வழிமுறைகளை முன்னெடுத்து, இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts