Email :16
புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக பொதுமக்கள் 15 நாட்களில் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.சத்யநாராயணன் தலைமையிலான ஒரு நபர் குழு அறிவித்துள்ளது. ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் பெயர் மாற்றம் உட்பட என்னென்ன திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. என்ன திருத்தம் மேற்கொள்ளலாம் என்று ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரைத்திட எம். சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்தார்.












