கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சாக்கோட்டை ஊராட்சியில் விஜயகாந்த் முழு உருவச்சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: டெல்டா விவசாயிகள் வாழ்ந்தால் தான் தமிழ்நாடு வாழ்ந்ததாக வரலாறு. அதுபோல அன்னை மொழி காப்போம், அனைத்து மொழியும் கற்போம் என கேப்டன் சொல்லிவிட்டு போனதை நாங்கள் பின்பற்றுகிறோம். நமது தாய்மொழி தமிழ். அது நமது உயிர் போன்றது. ஆனால் அனைத்து மொழியும் கற்கும்போது தான் தமிழ்நாட்டில் இருந்து வேறு மாநிலத்திற்கு செல்லும் போது வேலைவாய்ப்பு கிடைக்கும். பல்வேறு வகையில் எதிர்காலம் சிறக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.












