பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா அற்புதமாக பந்து வீசி 32 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நேற்றைய 3ம் நாள் ஆட்டத்தின்போது பும்ரா பந்து வீச முடியாமல் போனது. இதுகுறித்து ஆஸி துவக்க வீரர் உஸ்மான் கவாஜா கூறியதாவது: பும்ரா பந்து வீச்சை எதிர்கொள்வது பயமாகத்தான் உள்ளது. காயம் காரணமாக அவர் பந்து வீச முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதை சொல்ல நான் வெட்கப்பட வேண்டும்; இருந்தாலும் இன்று பும்ரா பந்து வீசாததற்கு கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இன்றைக்கு அவர் பந்து வீசப் போகிறார் என நினைத்தாலே கெட்ட கனவு போலாகி விடுகிறது. களத்தில் அவர் இல்லாவிட்டால், ‘ஓகே… இன்று நமக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது’ என நினைத்துக் கொள்வேன். நான் சந்தித்ததில் பும்ரா மிகவும் கடினமான பந்து வீச்சாளராக உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.











