புரோ கபடி போட்டியன் 11வது தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிகின்றன. இந்நிலையில் போட்டியில் பங்ேகற்ற 12 அணிகளில் அரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லி, யுபி யோதாஸ், ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ் என 5 அணிகள் பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்து விட்டன. இதில் முதல் இடத்தை உறுதி செய்து விட்ட அரியானா ஸ்டீலர்ஸ் அரையிறுதிக்கும் முன்னேறி விட்டது. அதே நேரத்தில் பிளே ஆப் சுற்றுக்கான எஞ்சிய ஒரு இடத்துக்கான போட்டியில் யு மும்பா, தெலுங்கு டைடன்ஸ் அணிகள் உள்ளன. டைடன்ஸ் தான் விளையாட வேண்டிய 22 ஆட்டங்களிலும் ஆடி 66 வெற்றிப் புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. யு மும்பா 21 ஆட்டங்களில் விளையாடி அதே 66 வெற்றிப் புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கிறது.












