Email :16
தமிழகம் முழுவதும் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை, தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை சிதைக்கும் உள்நோக்கத்துடனும், ஆதிக்க இந்தியை திணிக்கும் மத்திய பா.ஜனதா அரசைக் கண்டித்து, நாளை (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கிய நகரங்களில் பேரணியுடன் கூடிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக மாணவர் அணி அறிவித்தது.












