பாகிஸ்தானுக்கு எதிராக கோஹ்லியின் சதம் மற்றும் வீரர்களின் பங்களிப்பு குறித்து சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் “அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டிக்கான மிகச் சிறப்பான முடிவு இது. நிச்சயம் நீங்கள் உண்மையாகவே நாக்அவுட் செய்து விட்டீர்கள். இந்திய அணியில் மிகச் சிறப்பாக ஆடிய விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் அதன் பின் அற்புதமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா… உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்’’ எனக் கூறி இருக்கிறார். முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர் தனது பதிவில் “கோஹ்லி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடினால் தன்னை முழு அளவில் தயார் செய்து கொண்டு வருவார்.












