உலக பொருளாதார மன்றம் பல்வேறு நாடுகளிலும் பொது மற்றும் தனியார் துறைகளை சேர்ந்த முன்னணி தலைமை பொருளாதார நிபுணர்களுடனான ஆலோசனைகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், 2025ம் ஆண்டில் உலக பொருளாதாரம் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ளும். 56 சதவீத தலைமை பொருளாதார வல்லுநர்கள் உலக பொருளாதார நிலைமை பலவீனமடையும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். 17 பேர் மட்டுமே பொருளாதாரம் முன்னேற்றமடையக்கூடும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் வரும் ஆண்டுகளில் வளர்ச்சி படிப்படியாக குறையக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.












