Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

Breaking News :
  • Home
  • அரசியல்
  • சட்டமன்றத்தை அவமதித்த ஆளுநர் ஆர்.என்.ரவி….
அரசியல்

சட்டமன்றத்தை அவமதித்த ஆளுநர் ஆர்.என்.ரவி….

Email :15

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசின் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டார். உரையை வாசிக்காமல் 2 நிமிடங்களிலேயே பேரவையில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி. தேசிய கீதத்தை பாட அனுமதிக்கவில்லை எனக் கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றது பேசும் பொருளாகி உள்ளது. இதனிடையே தேசிய கீதம் இசைக்காததால் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ரவி வெளியேறியதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. சட்டப்பேரவையில் நிகழ்ச்சி தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சி இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுவதும் மரபு ஆகும்.எனினும், முதலில் தேசிய கீதம் பாடவேண்டும் என்று கடந்த ஆண்டு சபாநாயகருக்கு ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதே மரபு என்று சபாநாயகர் விளக்கம் அளித்தார். மரபை மாற்ற முடியாது என்றும் சபாநாயகர் கடந்த ஆண்டே திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். கடந்த ஆண்டும் முதலில் தேசிய கீதம் பாடவில்லை என்று கூறி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர். இந்த நிலையில், இன்று தொடங்கிய பேரவை கூட்டத் தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதற்கு ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையை விட்டு ஆளுநர் வெளியேறி உள்ளார்.

தொடர்ச்சியாக 2 ஆண்டுகளாக ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறி உள்ளது சட்டமன்றத்தை அவமதிக்கும் செயல் என கண்டனங்கள் எழுந்துள்ளன. சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது குறித்து விளக்கம் அளித்த எக்ஸ் தள பதிவு சில நிமிடங்களில் நீக்கப்பட்டிருந்தது. திருத்திய பதிவை மீண்டும் ஆளுநர் எக்ஸ் தளத்தில் பதிவேற்றியுள்ளார். ஆளுநர் மாளிகை முதலில் அளித்திருந்த விளக்கத்தில் நாடாளுமன்றத்தில் முதலில் தேசிய கீதம் பாடப்படுவதை சுட்டிக்காட்டியிருந்தது. புதிய பதிவில் நாடாளுமன்றத்தை மேற்கோள்காட்டிய வரிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts