மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி உடையும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவி வருகின்றன. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி, காங்கிரஸ் தனித்தனியாக களமிறங்குகின்றன. இதே போல, மகாராஷ்டிராவில் உள்ளாட்சி தேர்தலை தனித்து சந்திப்பதாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், நேற்று அளித்த பேட்டியில், “இந்தியா கூட்டணியில் பிளவு ஏதுமில்லை. பாஜவுக்கு எதிராக போராட மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கவே இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. அது அப்படியேதான் உள்ளது” என தெரிவித்துள்ளார்.












