Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

Breaking News :
  • Home
  • வர்த்தகம்
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.58,080க்கு விற்பனை….
வர்த்தகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.58,080க்கு விற்பனை….

Email :23

நகை வாங்குவோர்களுக்கு ஷாக்..! சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.58,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் நிலவில் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. திருமணம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தங்கம் வாங்குவது அதிகரித்துள்ளது. சர்வதேச அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை உயரத் தொடங்கியுள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.58,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.7,260-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts