காற்றின் வேகம் குறைந்ததால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிடித்த காட்டுத்தீயை அணைக்கும் பணியில் முன்னேற்றம் காண தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 7ம் தேதி காட்டுத் தீ பிடித்தது. லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ மளமளவென பரவியது. 9 நாட்களாக எரிவதால் இதுவரை 40,000 ஏக்கர் பரப்பளவில் காட்டுத் தீ சேதத்தை ஏற்படுத்தியது. ஹெலிகாப்டர்கள் மூலம் கடல் நீரை ஊற்றி காட்டுத் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. காட்டுத் தீயால் 26 பேர் உயிரிழந்த நிலையில் பலருக்கு தீக்காயம் ஏற்பட்டது.












