பழுதடைந்துள்ள பாதாள சாக்கடை மூடியை பார்வையிட்டு, உடனடியாக புதிதாக மாற்றியமைக்க அமைச்சர் சேகர்பாபு உத்தர விட்டுள்ளார். முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, சென்னை கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட 44 மாநகராட்சி வார்டுகளில் உள்ள 83 வட்டங்களிலும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் வீதி வீதியாக பொதுமக்களை நேரடியாக சந்தித்து, அவர்களின் தேவைகளை கண்டறிந்து குறைகளை தீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
பயணத்தின் தொடக்கமாக 7வது நாளான இன்று சென்னை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் சென்னை கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதி, 72-வது வார்டு, மாதவரம் நெடுஞ்சாலை, பெரம்பூர் மேம்பாலம் அருகில் உள்ள மாநகராட்சி பூங்கா, மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள வடிவேலு தெரு, செய்யூர், கோகுலம் பள்ளி அருகிலுள்ள பார்த்தசாரதி தெருவில் வசிக்கும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அப்பகுதியிலுள்ள உள்ள நீரேற்று நிலையத்தினை நேரில் சென்று பார்வையிட்டு அந்நிலையத்தினை மேம்படுத்துவது குறித்தும், அப்பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு இருசக்கர வாகனம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் அவர்கள் துறைமுகம் சட்டமன்ற தொகுதி, 60-வது வார்டு, கொத்தவால்சாவடி, டக்கர் தேவாலயம் அருகில் உள்ள செம்பு தாஸ் தெரு மற்றும் மூக்கர் நல்லமுத்து தெருவில் வசிக்கும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அப்பகுதியில் பழுதடைந்துள்ள பாதாள சாக்கடை மூடியை பார்வையிட்டு, உடனடியாக புதிதாக மாற்றியமைக்குமாறும், பாதுகாப்பில்லாமல் இருக்கும் மின்சார பில்லர் பாக்சை பாதுகாப்பு பார்வை அமைப்பான் (View Cutter) அமைக்கும்படி அலுவலர்களை அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின்போது, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா ராஜன் அவர்கள், வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., அவர்கள், மண்டலக் குழுத்தலைவர் ஸ்ரீராமலு, மண்டல அலுவலர்கள் ஏ.எஸ்.முருகன், பரிதா பானு, செயற்பொறியாளர்கள் சரவணன், லோகேஷ்வர், பகுதி செயளாளர் தமிழ்வேந்தன், மாமன்ற உறுப்பினர்கள் புனிதவதி எத்திராஜ், எம்.இசட்.ஆசாத், வட்ட செயலாளர்கள் பரிமளா சுரேஷ், புஷ்பராஜ், மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம், மின்வாரிய அலுவலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.












