Email :19
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் இறுதிப் போட்டியின் மகளிர் பிரிவில் நேற்று பெலாரஸ் வீராங்கனை அரைனா சபலென்கா – ரஷ்ய வீராங்கனை பொலினா குடெர்மெடோவா மோதினர். முதல் செட்டை பறிகொடுத்த சபலென்கா பின்னர் சுதாரித்து அதிரடியாக ஆடி, 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் பொலினாவை வென்று கோப்பையை கைப்பற்றினார்.
ஆண்கள் பிரிவில் நடந்த இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் ரெய்லி ஒபெல்கா, முதல் செட் ஆட்டத்தின்போது காயத்தால் வௌியேறினார். இதனால் செக் வீரர் ஜிரி லெஹெகா வென்றதாக அறிவிக்கப்பட்டு கோப்பையை கைப்பற்றினார்.












