Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

Breaking News :
  • Home
  • தமிழகம்
  • திருக்கோயில்களில் பயன்படாத நகைகள் உருக்கப்பட்டு இதுவரை 1,100 கிலோ தங்கக் கட்டிகள் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளன….
தமிழகம்

திருக்கோயில்களில் பயன்படாத நகைகள் உருக்கப்பட்டு இதுவரை 1,100 கிலோ தங்கக் கட்டிகள் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளன….

Email :28

திருக்கோயில்களில் பயன்படாத நகைகள் உருக்கப்பட்டு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளன என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார். சட்டப்பேரவையின் 4-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது இதில் வினாக்கள் விடைகள் நேரத்தில் துறைசார் அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில், ஆலங்குளம் உறுப்பினர் மனோஜ் பாண்டியனின் கேள்விக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் தெரிவித்துள்ளார்.

அதில், கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் கிடப்பில் இருந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து திருக்கோயில்களில் பயன்படாத நகைகளை உருக்கி இதுவரை 1,100 கிலோ தங்கக் கட்டிகள் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஆண்டுக்கு ரூ.11 கோடி திருக்கோயில்களுக்கு வருமானமாக ஈட்டப்பட்டிருக்கிறது. மேலும் இத்திட்டம் தொடரும். திருப்போரூர் கோயில் உண்டியலில் விழுந்த ஐபோனை ரூ.10,000-க்கு ஏலத்தில் கேட்ட உரிமையாளரிடமே நேற்று கொடுத்துவிட்டோம். இத்தகைய, கோயில் உண்டியலில் விழுந்த ஐபோன் ஏலத்தில் திருப்பி தரப்பட்டதை மேற்கொள்ள காட்டி தீர்வு காண முடியாத பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் அரசு திராவிட மாடல் அரசு என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts